அசாமில் திறக்கப்பட்ட "BAMBOO ORCHIDS" முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமில் பிரதமர் மோடி திறந்துவைத்த கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், வட-கிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காண்லாம்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது வட-கிழக்கு மாநிலங்களுக்கு விமான பயணத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளது. நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த முனையம், “BAMBOO ORCHIDS” என அழைக்கப்படுவதுடன், இயற்கையை மையமாகக்கொண்ட நாட்டின் முதல் விமான முனையமாகவும் அமைந்துள்ளது.

1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முனையத்தின் புதிய கட்டடம் ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது எனவும், மேம்படுத்தப்பட்ட ரன்வே வசதிகள் மூலம் இது ஒரு மணி நேரத்திற்கு 34 விமானங்கள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முனையம் வட-கிழக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலையையும், இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் கையாளப்பட்டுள்ள 140 டன் மூங்கில்கள், கலைமிகு உட்கட்டமைப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 57 காபோப் பூ தூண்கள், காசிரங்கா தேசிய பூங்காவின் வனச் சின்னங்கள், ஜாபி நுட்பங்கள், மஜூலி தீவின் பாரம்பரிய அம்சங்கள் போன்றவையும் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

அதேபோல, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி முனையத்திற்குள் வரும் தருணத்தில் “SKY FOREST” எனப்படும், வன அமைப்புச் சூழலை அவர்கள் அனுபவிக்க முடியும். ஒரு லட்சம் உள்ளூர் தாவரங்களை உள்ளடக்கிய அப்பகுதி பயணிகளுக்குக் காற்றழுத்தம் குறைந்த, இயற்கை சார்ந்த அமைதியான அனுபவத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கவுகாத்தியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் வட-கிழக்கு இந்தியாவின், விமான சேவைகளுக்கு புதிய தரநிலையை ஏற்படுத்தும் முக்கிய மையமாக உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: "BAMBOO ORCHIDS" terminal opened in Assam: A new chapter for North-Eastern air servicesவட-கிழக்கு விமான சேவைபுதிய அத்தியாயம்BAMBOO ORCHIDS"BAMBOO ORCHIDS" முனையம்PM Modi
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை – திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

Next Post

குளோபல் சவுத் : இந்தியா – எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies