அசாமில் திறக்கப்பட்ட "BAMBOO ORCHIDS" முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!
Mar 19, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமில் பிரதமர் மோடி திறந்துவைத்த கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், வட-கிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காண்லாம்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது வட-கிழக்கு மாநிலங்களுக்கு விமான பயணத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளது. நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த முனையம், “BAMBOO ORCHIDS” என அழைக்கப்படுவதுடன், இயற்கையை மையமாகக்கொண்ட நாட்டின் முதல் விமான முனையமாகவும் அமைந்துள்ளது.

1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முனையத்தின் புதிய கட்டடம் ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது எனவும், மேம்படுத்தப்பட்ட ரன்வே வசதிகள் மூலம் இது ஒரு மணி நேரத்திற்கு 34 விமானங்கள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முனையம் வட-கிழக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலையையும், இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் கையாளப்பட்டுள்ள 140 டன் மூங்கில்கள், கலைமிகு உட்கட்டமைப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 57 காபோப் பூ தூண்கள், காசிரங்கா தேசிய பூங்காவின் வனச் சின்னங்கள், ஜாபி நுட்பங்கள், மஜூலி தீவின் பாரம்பரிய அம்சங்கள் போன்றவையும் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

அதேபோல, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி முனையத்திற்குள் வரும் தருணத்தில் “SKY FOREST” எனப்படும், வன அமைப்புச் சூழலை அவர்கள் அனுபவிக்க முடியும். ஒரு லட்சம் உள்ளூர் தாவரங்களை உள்ளடக்கிய அப்பகுதி பயணிகளுக்குக் காற்றழுத்தம் குறைந்த, இயற்கை சார்ந்த அமைதியான அனுபவத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கவுகாத்தியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் வட-கிழக்கு இந்தியாவின், விமான சேவைகளுக்கு புதிய தரநிலையை ஏற்படுத்தும் முக்கிய மையமாக உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: "BAMBOO ORCHIDS" முனையம்PM Modi"BAMBOO ORCHIDS" terminal opened in Assam: A new chapter for North-Eastern air servicesவட-கிழக்கு விமான சேவைபுதிய அத்தியாயம்BAMBOO ORCHIDS
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை – திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

Next Post

குளோபல் சவுத் : இந்தியா – எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies