ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? - அச்சத்தில் பாகிஸ்தான்!
Jan 13, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூரில் ஹார்பி மற்றும் ஹரோப் ஆளில்லா ட்ரோன்களை மட்டுமின்றி, Warmate, SkyStriker, மற்றும் Nagastra ஆகிய வியூக ட்ரோன்களையும் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் தொடர்ந்து அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர்.இந்தத் தாக்குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜெய்​ஷ்-இ-​முகமது இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. வெறும் முன்​னோட்​டமான ஆப்ரேஷன் சிந்​தூர் 88 மணி நேரத்​தில் முடிந்​து​விட்​டது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைநிறுத்திக் கொள்ளாதத பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும் என்று இந்திய ராணுவத் த் தலைமை தளபதி ஜெனரல் உபந்திர திவேதி கடுமையாக எச்சரித்திருந்தார்.

மேலும், ‘ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 இந்திய இராணுவம் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படியே முப்படைகளின் ஒருங்கிணைந்த போர் ஒத்திகைகள் மற்றும் தீவிரமான போர்ப் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.

இவையெல்லாம் பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. முர்ரியின் 12வது காலாட்படைப் பிரிவு மற்றும் கோட்லி-பிம்பர் பகுதியில் உள்ளபடைப்பிரிவுகளைக் கட்டுப்படுத்தும் 23வது காலாட்படைப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜோரி, பூஞ்ச், நௌஷேரா மற்றும் சுந்தர்பனி ஆகிய இடங்களில் 2வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், கோட்லியில் 3வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், பிம்பர் பகுதியில் 7வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும் ஆளில்லா விமான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்களைக் கையாளுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நிலைநிறுத்தியுள்ள பாதுகாப்பு அமைப்புகளில், ஸ்பைடர் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு முக்கியமானதாகும். இது சிறிய சுற்றித்திரியும் வெடிமருந்துகள் மற்றும் பெரிய ஆளில்லா விமானங்களை 10 கிலோமீட்டர் தூரம் வரை கண்டறியும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

மேலும் தோளில் வைத்துச் சுடும் சஃப்ரா ஆளில்லா விமான ஜாமிங் துப்பாக்கியையும் பாகிஸ்தான் பயன்பாட்டில் வைத்துள்ளது. சுமார் 1.5 கிலோமீட்டர் பயனுள்ள வரம்பைக் கொண்ட இந்த துப்பாக்கி, ஆளில்லா விமானக் கட்டுப்பாடு, வீடியோ மற்றும் ஜிபிஎஸ் இணைப்புகளை சீர்குலைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டதாகும்.

இதுவரை நடந்த பாகிஸ்தான்- இந்தியா போரில் ஒவ்வொரு முறையும் இந்தியாவே வென்றது. பாகிஸ்தான் காஷ்மீரையும் கைப்பற்ற முடியாமல் கிழக்கு பாகிஸ்தான் முழுவதையும் இழந்ததுதான் வரலாறு. நான்கு போர்களிலும், இந்தியா மீது முதல் குண்டுகளை வீசிய பாகிஸ்தான் தோல்வியடைந்து சரணடைவதே வாடிக்கை என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Tags: PM Modiindian armyopreration sindoorpakistan newsWork on setting up anti-drone systems in full swing: When will Operation Sindoor 2.0 be? - Pakistan in fearஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது?
ShareTweetSendShare
Previous Post

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன்

Next Post

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies