தமிழகத்திற்கு ஒரு திறமையான டிஜிபியை நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள், பாட்டிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.
தமிழக டிஜிபியை கூட நியமிக்க முடியாமல் திமுக அரசு திராணியற்று உள்ளதாகவும், ஜால்ரா போடும் அதிகாரிகள் கிடைக்காததால், டிஜிபியை நியமிக்க திமுக அரசு மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.
திறமையான டிஜிபியை நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்றும், பொறுப்பு டிஜிபிக்கு பொறுப்பு டிஜிபியை நியமித்த பொறுப்பில்லாத முதலமைச்சர் என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.
















