நெதன்யாகுவிடம் ட்ரம்ப் புலம்பல் : யாருமே விருது கொடுக்க மாட்டேங்கிறாங்க!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நெதன்யாகுவிடம் ட்ரம்ப் புலம்பல் : யாருமே விருது கொடுக்க மாட்டேங்கிறாங்க!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அளவில் எட்டு போர்களைத் தடுத்து நிறுத்திய போதிலும் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதயன்யாகு உடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் புலம்பி இருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மார்-எ-லாகோ மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களைநிறுத்தியுள்ளதாகப் பெருமை பேசியுள்ளார்.

நீண்டகால போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம்கூடக் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தைவெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நெதன்யாகு தலைமையிலான தூதுக்குழுவினருடன் ட்ரம்ப் நடத்திய இருதரப்பு சந்திப்பின் வீடியோவில் இது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அதில், இராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியதும், தனக்கு நோபல் அமைதிப் பரிசு தரப்பட வில்லை என்று விரக்தியுடன் ட்ரம்ப் பேசுவது பரிதாபமாக உள்ளது.

ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான போரை நிறுத்தவில்லை என்றால் அந்த நாடுகள் மீது 200 சதவீதம் வரியும் வர்த்தக தடையும் விதிக்கப்படும் என்று தான் மிரட்டியதாகவும், அதனாலேயே 35 ஆண்டுகளாக நீடித்த போர் உடனடியாக முடிவுக்கு வந்தததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ரஷ்ய அதிபர் புதின் தம்மிடம் ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் போரைத் தீர்த்து வைத்ததை நம்ப முடியவில்லை என்று கூறியதாகவும், 10 ஆண்டுகளாக முயற்சி செய்தும் தம்மால் முடியாததை ஒரே நாளில் தீர்த்து வைத்ததாக அவர் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவைப் பொறுத்தவரை, இந்தியா பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். கடந்த மே மாதம் பத்தாம் தேதி, முதல் நாள் இரவு நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும்உடனடியாகப் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தனது TRUTH SOCIAL பக்கத்தில் பதிவிட்டார்.

பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும், இதில் மூன்றாவது நாட்டின் அல்லது மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.

மேலும், ஆப்ரேஷன் சிந்துாரை நிறுத்துமாறு எந்த உலகத் தலைவரும் இந்தியாவைக் கேட்கவில்லை என்றும் தற்காலிக போர் நிறுத்த முடிவுகள் சுதந்திரமாக எடுக்கப்பட்டன என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவு படுத்தி இருந்தார். இந்நிலையில், 70வது முறையாக இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் ட்ரம்ப் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

Tags: Donald TrumpTrump's complaint to Netanyahu: Nobody is giving me any awardsநெதன்யாகுவிடம் ட்ரம்ப் புலம்பல்
ShareTweetSendShare
Previous Post

டிரம்புக்கு ஆறுதல் அமைதி பரிசை அறிவித்த இஸ்ரேல்!

Next Post

சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் – நயினார் நாகேந்திரன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies