ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் - பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் – பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார் என தெரிவித்தார்.

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாள் இன்று என தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கென சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை உடைத்து அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர். ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உறுதியான வரலாற்று ஆவணம் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.

தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கையின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் என கூறியுள்ளார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக! இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில்,  ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போராடிய பெண் அரசியாக திகழும் அம்மையார் வேலுநாச்சியார் அவர்கள், மிகுந்த தீரத்துடனும் வீரத்துடனும் களம் கண்டார் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியர்களுக்கு எதிராக மருது சகோதரர்களோடு இணைந்து போரிட்டு திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது வீரதீர நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய, முதல் இந்தியப் பெண் வீராங்கனை, மகாராணி வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவும், தைரியமும், மக்கள் மீதான அக்கறையும் உடையவராகத் திகழ்ந்தவர். தமிழ் மண்ணில் பெண்கள் துணிச்சலிலும் தீர்க்கத்திலும் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் வேலு நாச்சியார். அறத்திலும் மறத்திலும் சிறந்து விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் புகழ் போற்றி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: modi greetingsannamalai greetingsl murugan greetingsRani Velu Nachiyar birth anniversary.NAINAR GREETINGS
ShareTweetSendShare
Previous Post

திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவு வாயில் கட்டுமானப்பணி – சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Next Post

ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies