அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்று சுமார் ஆயிரத்து இருபது கோடி ரூபாய் வரை அமைச்சர் கே.என்.நேரு ஊழல் செய்திருப்பதால்,
அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
ஆனால் இதுவரை தமிழக காவல்துறை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த அவர், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















