எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் - நயினார், அண்ணாமலை கண்டனம்!
Mar 15, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – நயினார், அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 10, 2026, 07:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோர் மீது, திமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கோர முகத்தை கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், திமுக-வினர் இதுபோன்ற வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,விவாதங்களில் மக்கள் பிரதிநிதிகளாக கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட, திமுக-வினர் வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவிலும், பகுத்தறிவு மேலோங்கும்போது, திமுக-வினரின் ஒரே பதில் வன்முறை மட்டும் தான் என அவர் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோரை தாக்க, நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவும் விதமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக திமுக குண்டர்களை பாதுகாக்க காவல்துறை இயந்திரம் அதிக நேரம் வேலை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, தெருக்களில் பயம் ஆட்சி செய்த திமுக-வின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: nainar condemnS.G.SuryaS.G. Surya attackedBJP state youth wing presidentsenthilvelanbjpDMKAnnamalai condemnedThanga Tamilselvan.
ShareTweetSendShare
Previous Post

காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் பாஜகவினர் மீது தாக்குதல் – எஸ்.ஜி சூர்யா கண்டனம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies