எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் - நயினார், அண்ணாமலை கண்டனம்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – நயினார், அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 10, 2026, 07:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோர் மீது, திமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கோர முகத்தை கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், திமுக-வினர் இதுபோன்ற வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,விவாதங்களில் மக்கள் பிரதிநிதிகளாக கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட, திமுக-வினர் வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவிலும், பகுத்தறிவு மேலோங்கும்போது, திமுக-வினரின் ஒரே பதில் வன்முறை மட்டும் தான் என அவர் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோரை தாக்க, நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவும் விதமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக திமுக குண்டர்களை பாதுகாக்க காவல்துறை இயந்திரம் அதிக நேரம் வேலை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, தெருக்களில் பயம் ஆட்சி செய்த திமுக-வின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: S.G. Surya attackedBJP state youth wing presidentsenthilvelanbjpDMKAnnamalai condemnedThanga Tamilselvan.nainar condemnS.G.Surya
Share
Tweet
SendShare
Previous Post

காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் பாஜகவினர் மீது தாக்குதல் – எஸ்.ஜி சூர்யா கண்டனம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies