இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் - சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்...
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

Manikandan by Manikandan
Jan 10, 2026, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் CPEC (China-Pakistan Economic Corridor) திட்டங்களில், பணிபுரிந்து வந்த சீனர்கள் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை பெரும்பாலும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நிகழ்ந்தவை. பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இதனைத் தடுப்பதில் தோல்வியடைந்து வந்தது சீனாவிற்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணிய சீனா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் நேரடியாக இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு படைகள், உள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு வந்தது.

அதன் காரணமாகப் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், சீனாவின் கண்காணிப்பு மற்றும் நேரடி நடவடிக்கைகளின் கீழ் வரத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு படிப்படியாக அடிபணிந்து வரும் பாகிஸ்தான், புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது.

இது அந்நாட்டு அரசு தனது சுயாதீனத்தை இழந்துள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் சீனாவின் கண்காணிப்பில் முழுமையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. CPEC மற்றும் பிற திட்டங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், சீன முதலீடுகள் மற்றும் நிதியோட்டங்கள் பாகிஸ்தானில் நேரடியாகச் செயல்படும் தனித்துறை அமைப்பின் கீழ் எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை உருவாக்குகியுள்ளன. குறிப்பாக, கில்கிட் – பாலிஸ்தானில் சீன பாதுகாப்பு படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைகளுக்கு மிக அருகே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

இதனால் இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் மட்டுமல்லாமல், தெற்காசிய மற்றும் தென்னிந்திய எல்லைகளிலும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: pakistanchinaindian armychina armypak armyCPECIndia
ShareTweetSendShare
Previous Post

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

Next Post

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies