இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் - சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்...
Jul 28, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

Manikandan by Manikandan
Jan 10, 2026, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் CPEC (China-Pakistan Economic Corridor) திட்டங்களில், பணிபுரிந்து வந்த சீனர்கள் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை பெரும்பாலும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நிகழ்ந்தவை. பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இதனைத் தடுப்பதில் தோல்வியடைந்து வந்தது சீனாவிற்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணிய சீனா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் நேரடியாக இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு படைகள், உள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு வந்தது.

அதன் காரணமாகப் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், சீனாவின் கண்காணிப்பு மற்றும் நேரடி நடவடிக்கைகளின் கீழ் வரத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு படிப்படியாக அடிபணிந்து வரும் பாகிஸ்தான், புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது.

இது அந்நாட்டு அரசு தனது சுயாதீனத்தை இழந்துள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் சீனாவின் கண்காணிப்பில் முழுமையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. CPEC மற்றும் பிற திட்டங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், சீன முதலீடுகள் மற்றும் நிதியோட்டங்கள் பாகிஸ்தானில் நேரடியாகச் செயல்படும் தனித்துறை அமைப்பின் கீழ் எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை உருவாக்குகியுள்ளன. குறிப்பாக, கில்கிட் – பாலிஸ்தானில் சீன பாதுகாப்பு படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைகளுக்கு மிக அருகே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

இதனால் இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் மட்டுமல்லாமல், தெற்காசிய மற்றும் தென்னிந்திய எல்லைகளிலும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: indian armychina armypak armyCPECIndiapakistanchina
ShareTweetSendShare
Previous Post

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

Next Post

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies