இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் - சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்...
Apr 23, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

Manikandan by Manikandan
Jan 10, 2026, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் CPEC (China-Pakistan Economic Corridor) திட்டங்களில், பணிபுரிந்து வந்த சீனர்கள் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை பெரும்பாலும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நிகழ்ந்தவை. பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இதனைத் தடுப்பதில் தோல்வியடைந்து வந்தது சீனாவிற்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணிய சீனா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் நேரடியாக இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு படைகள், உள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு வந்தது.

அதன் காரணமாகப் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், சீனாவின் கண்காணிப்பு மற்றும் நேரடி நடவடிக்கைகளின் கீழ் வரத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு படிப்படியாக அடிபணிந்து வரும் பாகிஸ்தான், புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது.

இது அந்நாட்டு அரசு தனது சுயாதீனத்தை இழந்துள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் சீனாவின் கண்காணிப்பில் முழுமையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. CPEC மற்றும் பிற திட்டங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், சீன முதலீடுகள் மற்றும் நிதியோட்டங்கள் பாகிஸ்தானில் நேரடியாகச் செயல்படும் தனித்துறை அமைப்பின் கீழ் எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை உருவாக்குகியுள்ளன. குறிப்பாக, கில்கிட் – பாலிஸ்தானில் சீன பாதுகாப்பு படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைகளுக்கு மிக அருகே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

இதனால் இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் மட்டுமல்லாமல், தெற்காசிய மற்றும் தென்னிந்திய எல்லைகளிலும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: CPECIndiapakistanchinaindian armychina armypak army
ShareTweetSendShare
Previous Post

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

Next Post

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

Related News

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies