இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் - சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்...
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

Manikandan by Manikandan
Jan 10, 2026, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் CPEC (China-Pakistan Economic Corridor) திட்டங்களில், பணிபுரிந்து வந்த சீனர்கள் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை பெரும்பாலும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நிகழ்ந்தவை. பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இதனைத் தடுப்பதில் தோல்வியடைந்து வந்தது சீனாவிற்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணிய சீனா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் நேரடியாக இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு படைகள், உள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு வந்தது.

அதன் காரணமாகப் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், சீனாவின் கண்காணிப்பு மற்றும் நேரடி நடவடிக்கைகளின் கீழ் வரத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு படிப்படியாக அடிபணிந்து வரும் பாகிஸ்தான், புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது.

இது அந்நாட்டு அரசு தனது சுயாதீனத்தை இழந்துள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் சீனாவின் கண்காணிப்பில் முழுமையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. CPEC மற்றும் பிற திட்டங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், சீன முதலீடுகள் மற்றும் நிதியோட்டங்கள் பாகிஸ்தானில் நேரடியாகச் செயல்படும் தனித்துறை அமைப்பின் கீழ் எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை உருவாக்குகியுள்ளன. குறிப்பாக, கில்கிட் – பாலிஸ்தானில் சீன பாதுகாப்பு படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைகளுக்கு மிக அருகே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

இதனால் இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் மட்டுமல்லாமல், தெற்காசிய மற்றும் தென்னிந்திய எல்லைகளிலும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: CPECIndiapakistanchinaindian armychina armypak army
Share
Tweet
SendShare
Previous Post

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

Next Post

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies