பொங்கல் திருநாளையொட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை, வலசை அரிய மலை கோயில் காளை மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் கோயில் காளைகள் வாடிவாசல் முன்பு அழைத்துவரப்பட்டு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்பிக்க உள்ளார். பின்னர், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
















