கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி - கம்பீரமாக நடந்து வந்த காளை - திகைத்து நின்ற வீரர்கள்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

Manikandan by Manikandan
Jan 17, 2026, 06:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு இம்முறையும் சிறப்பாக நடத்தப்பட்டது. காலை முதலே மாடுபிடிவீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் துணை முதலமைச்சரின் வருகைக்காக போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்ட நிலையில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறக்கப்பட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.

இதனையடுத்து ஆட்டம் பாட்டத்துடன் அழைத்துவரப்பட்ட கோயில் காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, பின்னர் விழா கமிட்டியினர் சார்பில் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது அதனை பிடிக்காமல் மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

இரண்டாவது சுற்றில் களமிறக்கப்பட்ட நடிகர் சூரியின் காளை யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது, வெற்றி பெற்ற இவரது காளையை அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே யாரிடமும் பிடிபடாமல் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பில்கேட்ஸ் என்ற காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு , அதன் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது

தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுச்சுற்று முடிவில் அஜித், பிரபாகரன் ஆகியோர் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து விழா கமிட்டியினர், அஜித் முதலிடம் பிடித்ததாக அறிவித்தனர். இதனையடுத்து அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 3வது இடம் பிடித்த கார்த்திக் ஆகியோருக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கோச்சடையை சேர்ந்த விக்கி என்பவரின் காளை கம்பீரமாக நடந்து வந்த நிலையில் அதனை நெருங்க முடியாமல் வீரர்கள் திகைத்து நின்றனர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்த காளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதே போல குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் காளை யாரிடமும் பிடிபடாததால் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளைக்கு, கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்பட்டது.

Tags: avaniyapuram jallikattu 2026pongal 2026mattu pongal 2026'Pongalo Pongal'.madurai palamedu jallikattu2026 jallikattupalamedu jallikattu 2026alanganallur jallikattu 2026
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Next Post

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies