ஊடக விவாத மோதல் தொடர்பான காட்சிகளை ஆளுநரிடம் சம்ர்ப்பித்துள்ளதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது தாக்குல் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், பாஜகவினர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். .
இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்பித்துள்ளதாக கூறிய எஸ்.ஜி.சூர்யா, சம்பவம் குறித்து அரசிடம் நிலை அறிக்கை கேட்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
















