புதுச்சேரியில் பெண்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மாஹே பிராந்தியத்தில் உள்ள பல்லூர் பகுதியில் சமுதாய சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித் தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதல் ரூ. 2,500
பெண்களுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை
அடுத்த மாதம 7-ம் தேதி முதல் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் உறுதி
















