சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் “பேச்சான்” அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மையம் சார்பில் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
















