பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் - காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு
Jan 23, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

Manikandan by Manikandan
Jan 23, 2026, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவை புனரமைக்க ட்ரம்ப் உருவாக்கியுள்ள Board of Peace குழுவில் இணைந்த பாகிஸ்தானின் முடிவுக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காசாவில் பாலஸ்தீனர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி என்றும், உலக அளவில் ஐநா சபையை புறக்கணிக்கும் செயல் என்றும் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் பிரிட்டனின் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் இடம் பெற்றுள்ளனர்.

போரால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வாரியத்தில் இணைவதற்கு, இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கெனவே துருக்கி, கத்தாா் ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால் அந்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கொள்கை அரசியல் மற்றும் ஒழுக்க ரீதியாக அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்ற கூறியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த அமைதி திட்டம் ஒரு புதிய காலனித்துவ முயற்சியின் தெளிவான அடையாளம் என்றும், காசா புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் மேற்பார்வை ஆகியவற்றை அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி என்றும் தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், குறுகிய கால கணக்கீட்டால் எடுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் நாட்டுக்கு பெரும்பாலும் நீடித்த சிக்கல்களையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் பொது விவாதம் ஏதும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் சேரும் முடிவு, பிரதமர் Shehbaz Sharif அரசு, நாட்டை புறக்கணிதுள்ளதாக (Tehreek-i-Tahafuz-i-Ayeen-i-Pakistan ) தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் தலைவர் (Mustafa Nawaz Khokhar) முஸ்தபா நவாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.


மேலும் , நிரந்தர உறுப்பினராவதற்கு ஒரு பில்லியன் டாலர் என்று விலை வைத்திருப்பதால் இது பணக்காரர்களின் சங்கத்தை உருவாக்குகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் பெரும்பாலும் என்ன செய்யும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசு ஒரு விவேகமற்ற முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ள ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் (மலீஹா லோதி), மலீஹா லோதி, தான் எடுக்கும் எடுக்கப் போகும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவையும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுவதற்காகவே ட்ரம்ப் இந்த அமைதி வாரியத்தை உருவாக்க்கியுள்ளார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேலுடன் இந்த ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் அமரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ இது பாகிஸ்தானுக்கு அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: pakistanPakistan PMgazaisrealdomestic oppositionBoard of Peace committee
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

Next Post

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

Related News

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த ஈரான் – நிர்வாணப்படுத்தி தாக்குதல்..பதைபதைக்க வைக்கும் அரசின் கொடூரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies