இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! - சிறப்பு தொகுப்பு
Mar 18, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 30, 2026, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று போற்றப் படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஒரு போதும் தனது சந்தையை முழுமையாகத் திறக்காத சுயபாதுகாப்பு உடைய நாடாகவே இந்தியா இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்ததிலிருந்து அது மாறிவருகிறது.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வர்த்தகப் போராகவே மாற்றினார்.

உலக நாடுகள் மீது வரிவிதித்த அமெரிக்க அதிபர், ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமாக காட்டி இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தார்.

இதனால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவீதம் வரை குறையும் என்றும், சுமார் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரியும் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் சமாளிக்கவும், இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் சிறந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது அமெரிக்காவுக்கு விடப்படும் நேரடி செய்தியாகவே பார்க்கப் படுகிறது.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க மறுத்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வது உக்ரைன் போருக்கு ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார்.

சொல்லப்போனால் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதியாகாமல் இருந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக ட்ரம்பின் வரிக் கொள்கைகளே காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க மற்றும் சீன ஆதிக்கத்தால் தடுமாறும் சிக்கலான உலகச் சூழலில் நடுத்தர வல்லரசு நாடுகளால் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது.

எனவே, பிற உலக நாடுகளை வரி கொள்கையால் அதிபர் ட்ரம்ப் இனி மிரட்ட முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் உடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதார மற்றும் இராஜதந்திர உத்தியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இனி, அமெரிக்காவை விட இந்தியாவே ஐரோப்பிய நாடுகளின் மொத்த பொருளாதாரத்தையும் பயன்படுத்தப்போகிறது.

ஏற்கெனவே கடந்த மே மாதம் பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவும், நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதே மாதத்தில் ஓமனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியது.

அடுத்து வரும் பிப்ரவரி மாதம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இந்தியாவுக்கு வருகை தரும் போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி,இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் இராஜதந்திர விதிகளை மாற்றுவதில் புதிய மாற்றத்தை உருவாக்கிய இந்தியாவால் உலக அளவில் தனித்து விடப்பட்ட நிலையில் அமெரிக்கா, அரசியல் ரீதியான நடவடிக்கையை எடுக்குமா ? என்பது தான் இப்போதைய கேள்வி.

Tags: Free Trade Agreement.us presidentputinTrumpEuropean Union
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

Next Post

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

Related News

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகிகள் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies