அஜித் பவார் விமான விபத்து - விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!
Sep 19, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசின் தலைவருமான அஜித் பவார் சென்ற தனிவிமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானக் குழுவினர் கடைசியாக “ஐயோ…” என்று கதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் உள்ள பாராமதிக்குச் சென்றார். பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்திலிருந்த அஜித் பவார் உள்ளிட்ட அனைவரும் தீயில் கருகிப் பலியாகினர்.

மும்பையில் இருந்து காலை 8.10 மணிக்கு பாராமதிக்குப் புறப்பட்ட லியர்ஜெட் விமானம் 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

காலை 8:18 மணிக்கு விமானப் போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பிறகு இருபத்தி ஆறு நிமிடங்கள் கழித்து, காலை 8:44 மணிக்கு, அந்த விமானம் விமான ஓடுபாதைக்கு அருகில் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதையும், தீப்பற்றி விமானம் எரிவதையும் பெரும் புகையும் தெரிகின்றன.

புறப்பட்டதில் இருந்து வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே வானில் பறந்த இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் இடதுபுறம் சாய்வதைக் காட்டும் ஒரு புதிய காணொளியும் வெளியாகியுள்ளது.

விமானங்களின் நேரலை கண்காணிப்பு தளமான Flightradar24-ன் தரவுகள் படி, அஜித் பவார் சென்ற லியர்ஜெட் 45 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டதும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 19,000 அடி உயரத்தில் பறந்ததாக தெரியவருகிறது.

பாராமதி விமான நிலையத்தில் ஓடுபாதை 11- ல் பார்வை அடிப்படையிலான தரையிறங்கும் முயற்சியை லியர்ஜெட் விமானிகள் மேற்கொண்டனர்.

காற்று மற்றும் பார்வைத் தெளிவு குறித்த வானிலை பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். காற்று அமைதியாக இருப்பதாகவும், பார்வைத் தெளிவு சுமார் 3,000 மீட்டர்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஆனாலும் ஓடுபாதை தெளிவாக தெரியாததால் தரையிறங்கும் முடிவைக் கைவிட்ட விமானிகள், ஒரு சுற்று சுற்றிவிட்டு இரண்டாவது முறையாக மீண்டும் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தனர்.

ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு, ஓடுபாதை தெரிகிறதா என்று விமானிகளிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு விமானிகள் தெளிவாக தெரிகிறது என்று ஒப்புக்கொண்டதாகவும், இதனையடுத்து பாராமதியில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அனுமதியை மீண்டும் உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தரையிறங்குவது குறித்த எந்த உறுதிப்படுத்தல் பதிலும் தராத நிலையில் Automatic Dependent Surveillance-Broadcast சிக்னல்களும் விமானத்தில் இருந்து வரவில்லை என்றும் உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

இதற்கு ஒரு நிமிடம் கழித்து, காலை 8.44 மணிக்கு, சிசிடிவி காட்சிகளில் இருந்து கிடைத்த புதிய காட்சிகளில் விமானம் ஒரு பக்கமாக சாய்ந்து தரையில் மோதி தீப்பிடித்து எரிவதை காண முடிகிறது.

விமானக் குழுவினரிடமிருந்து கடைசியாகக் கேட்கப்பட்ட வார்த்தைகள் ஐயோ என்ற அலறல் தான் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறை குரல் பதிவுக் கருவி மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவி ஆகியவையும் மீட்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விமான விபத்து விசாரணைப் பணியகமும் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர அரசியலின் ‘தாதா’ என்று அன்புடன் அழைக்கப்படும் அஜித் பவாரின் மறைவு அம்மாநிலத்தை மட்டுமில்லாமல் தேசத்தையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது

Tags: ajit pawar death after plane crashajit pawar accidentplane issuemumbaiMaharastraAjit Pawarajit pawar death
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Next Post

மத்திய பட்ஜெட் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies