இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! - சிறப்பு தொகுப்பு
Aug 5, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 30, 2026, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று போற்றப் படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஒரு போதும் தனது சந்தையை முழுமையாகத் திறக்காத சுயபாதுகாப்பு உடைய நாடாகவே இந்தியா இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்ததிலிருந்து அது மாறிவருகிறது.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வர்த்தகப் போராகவே மாற்றினார்.

உலக நாடுகள் மீது வரிவிதித்த அமெரிக்க அதிபர், ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமாக காட்டி இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தார்.

இதனால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவீதம் வரை குறையும் என்றும், சுமார் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரியும் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் சமாளிக்கவும், இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் சிறந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது அமெரிக்காவுக்கு விடப்படும் நேரடி செய்தியாகவே பார்க்கப் படுகிறது.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க மறுத்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வது உக்ரைன் போருக்கு ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார்.

சொல்லப்போனால் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதியாகாமல் இருந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக ட்ரம்பின் வரிக் கொள்கைகளே காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க மற்றும் சீன ஆதிக்கத்தால் தடுமாறும் சிக்கலான உலகச் சூழலில் நடுத்தர வல்லரசு நாடுகளால் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது.

எனவே, பிற உலக நாடுகளை வரி கொள்கையால் அதிபர் ட்ரம்ப் இனி மிரட்ட முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் உடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதார மற்றும் இராஜதந்திர உத்தியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இனி, அமெரிக்காவை விட இந்தியாவே ஐரோப்பிய நாடுகளின் மொத்த பொருளாதாரத்தையும் பயன்படுத்தப்போகிறது.

ஏற்கெனவே கடந்த மே மாதம் பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவும், நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதே மாதத்தில் ஓமனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியது.

அடுத்து வரும் பிப்ரவரி மாதம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இந்தியாவுக்கு வருகை தரும் போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி,இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் இராஜதந்திர விதிகளை மாற்றுவதில் புதிய மாற்றத்தை உருவாக்கிய இந்தியாவால் உலக அளவில் தனித்து விடப்பட்ட நிலையில் அமெரிக்கா, அரசியல் ரீதியான நடவடிக்கையை எடுக்குமா ? என்பது தான் இப்போதைய கேள்வி.

Tags: putinTrumpEuropean UnionFree Trade Agreement.us president
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

Next Post

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

Related News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies