மத்திய பட்ஜெட் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?
May 2, 2026, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

Manikandan by Manikandan
Jan 30, 2026, 09:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது… அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்….

பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 7 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது…

அதில் குறிப்பாக, பிரதமரின் “சூரிய கிரண்” திட்டத்தைப் போன்று, ரூஃப்டாப் சோலார் திட்டத்திற்கு 25 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும் என்கிறார் கொடிசியா தலைவர் கார்த்திக்கேயன்…

CGTMSE திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், 25 கோடி ரூபாய் வரை 100% கடன் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75% உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுவதால் வங்கிகள் தயக்கம் காட்டுவதாகவும், இது உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை நேரடியாக பாதிப்பதாகவும் கூறுகிறார்…

‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாகவும், ரேப்பியர் தறிகளாகவும் மாற்ற மத்திய அரசு வழங்கி வந்த மானியம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை சுமார் 50 சதவீத விசைத்தறிகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி .

தமிழகத்தில் விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் சமீப காலமாக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, விசைத்தறிக் கூடங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில் ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் அதன்மூலம் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது…

Tags: gstbjp indiacoimbatoretn bjpunion budgetbudget 2026industrialistsbjp
ShareTweetSendShare
Previous Post

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

Next Post

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் – கண் பார்வை பறிபோனதா?

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies