பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் - கண் பார்வை பறிபோனதா?
Aug 5, 2026, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் – கண் பார்வை பறிபோனதா?

Manikandan by Manikandan
Jan 30, 2026, 10:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவரது கண் பார்வை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறையில் என்ன நடக்கிறது…இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்பட்ட இம்ரான்கான், 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் பரிசாக வழங்கிய 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ய முயன்றதாகவும், ஊழல் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கான் தற்போது, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார்.

அவரது உடல்நலம் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது… அதில் இம்ரான்கான் கடுமையான கண் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நிரந்தரமாக பார்வையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இருந்து இம்ரான் கான் தனது குடும்பத்தினருடனோ அல்லது வழக்கறிஞர்களுடனோ எவ்வித தொடர்பும் வைத்திருக்கவில்லை. இம்ரான் கானுக்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், கண் மருத்துவ மதிப்பீட்டை நடத்துவதற்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி 31ஆம் தேதி தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் இம்ரானின் கண்பார்வை நீண்ட காலத்திற்கு பாதிக்கப்படக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்தின்படி , இம்ரான் தனது சட்டக் குழுவைச் சந்திக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டதாகவும், பல நீதிமன்றங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த விபரீதம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இம்ரான் கானுக்கு எதிராக அதிகாரிகள் வழக்குத் தொடரும் அதே வேளையில், அவரது வழக்கறிஞர்களுக்கு இம்ரானை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவது அபத்தமானது என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனிடையே இம்ரான் கானுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால் சிறைத்துறை நிர்வாகம், தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவரது சகோதரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இம்ரானுக்கு கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில், தனது தனிப்பட்ட மருத்துவரை அணுக அனுமதி வழங்கப்பட்டது, அதன் பின்னர், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அவரை பரிசோதிக்க அனுமதிக்கப்படவில்லை.. அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஒரு கைதியின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விஷயத்தில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது அரசியலைப் பற்றியது அல்ல, ஆரோக்கியத்தைப் பற்றியது எனவும், எந்தவொரு அலட்சியமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் வலியுறுத்தி உள்ளது.

Tags: imprisonedformer Pakistani Prime Ministerpakistanimran khanpolitical acteyesight
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பட்ஜெட் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

Next Post

பிப்ரவரி 5-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Related News

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies