‘தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இருந்து வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக சென்று பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பேட்டியளித்த அவர், பழனி வரும் பக்தர்கள் சண்முகநதியில் இறங்க யோசிக்கும் அளவிற்குதான் திமுக அரசு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முருகப்பெருமானை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
மதுராந்தகத்தில் கூடிய கூட்டத்தைக் கண்டு ஆளும் கட்சியினர் பதற்றத்தில் உள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்….
















