இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் பேசியது
மத்திய அரசின் நிதி சார்ந்த நடவடிக்கைகளால் மக்கள் பயனடைகின்றனர் எனவும் பாஜக அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரித்து உள்ளது என கூறினார்
சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது எனவும் வளர்ந்த பாரதம் என்ற நிலையை அடைய மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுகிறது என கூறியுள்ளார்

வளர்ச்சியின் பலன் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என கூறிய நிதியமைச்சர் புனிதமான தைப்பூச நாளிலும், ரவிதாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்
நீண்டகால தொழில் முதலீட்டு திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம் எனவும் மூன்று கடமைகளை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
மேலும் புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்
வாகன விபத்து இழப்பீட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் வரிவிலக்கு அறிவிப்பு அளிக்கப்படும் எனவும்
நாடு முழுவதும் எளிமையான வருமான வரியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படும் என கூறினார்
மருத்துவ கல்விக் கடனுக்கான வரிபிடித்தம் 5% இருந்து 2% ஆக குறைக்கப்படும் என தெரிவித்தார்
நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.3% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என கூறினார்
வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார் மேலும்
வருமானவரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
















