தமிழரின் தொன்மையைத் தூக்கிப்பிடிக்கும் மத்திய பட்ஜெட் என தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் தொல்லியல் தலமான ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் என மத்திய நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனவும்
தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் எங்கும் உயர்த்திப் பிடிப்பதோடு, தமிழ்ச் சமுதாயத்தின் பழம்பெருமையை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்குத் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
















