தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்லா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும்,
உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் அறிவிக்கப்படும் என்றும்,
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
















