தைப்பூச விழாவை ஒட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா தொடங்கியது.
அதன்படி தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று, சுவாமி கபாலீஸ்வரர் கற்பகாம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே இன்றும், நாளையும் வள்ளி, தெய்வானையுடன் சிங்கார வேலர், தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இந்த நிகழ்வு இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















