திருப்பூர் அருகே சிறுபூலுவாப்பட்டியில் தைப்பூசம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் நோக்கமாக ஹிந்து தர்மத்தில் பெண்களின் பெருமை, நமது தேசத்தின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு, மேலும் குடும்ப வாழ்வியல் குறித்தும், முருகனின் பெருமை குறித்தும் பொது மக்களிடையே உரை நிகழ்த்தினர்.முருகன் குறித்து பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகுமார், ராஜராஜன், மனோஜ் குமார், சிவக்குமார் ஆகியோர் குடும்ப வாழ்வியல் குறித்து பொது மக்களிடையே உரையாற்றினர்.
மேலும் மேலும் குடும்பம் என்பது சுமை அல்ல அது ஒரு உறவு என்றும் நாம் அனைவரும் இந்த பாரத தேசத்தில் உறவுகளால் பெருமைப்பட்டு உள்ளோம்,
அனைவரும் குடும்பத்தோடு கூடி வாழ வேண்டும் நமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக உள்ள பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்,
குலதெய்வ வழிபாடுகளை போற்றிட வேண்டும் போன்ற பல்வேறு கலாச்சார தகவல்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பகிர்ந்தனர்.
















