திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பாலமுருகன் கோயிலில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, மண்ணச்சநல்லூரை சுற்றியுள்ள 35 ஊராட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொள்ளிடம் திருகாவேரி ஆற்றில் தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
















