கெங்கவல்லி அருகே இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூர் மணக்காடு பகுதியில் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எருதாட்டம் நடைபெற்றது.
அப்போது, பழனிமுருகன் என்பவரின் காளை , அஜய் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி வாகனத்தை சேதப்படுத்தியது. இதனையடுத்து, பழனிமுருகனின் ஊருக்கு, 30க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்ற அஜய், தனது வாகனத்தை சரி செய்து தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது, ஏற்பட்ட இருதரப்பு மோதலில், பழனிமுருகனுக்கு ஆதரவாக பேசிய 2 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தவெக நகர செயலாளர் அருண் உள்ளிட்ட 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















