டெல்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு ஒன்றைக் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் மிகப்பெரிய வளைவு ஒன்றை கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, 123 அடி மற்றும் 165 அடி உயரம் கொண்ட திட்டத்தை தயாரித்து அதிபர் டிரம்பிடம் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.
திட்டத்தை நிராகரித்த அதிபர் டிரம்ப், பார்வையாளர்களை கவரும் வகையில், அது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தியா கேட் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் அழகான வெற்றி வளைவை விட தங்களுடையது மிகச்சிறப்பானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















