தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் விஜய்யின் வருகையால் பாஜக பயப்படுகிறதா? என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விஜய்யை பார்த்து பயப்பட வேண்டியது திமுகதான் எனக்கூறினார்.
ஒருபுறம் விஜயின் வருகை, மற்றொரு புறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து வருவது ஆகியவை திமுகவை பயமுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பயத்தால்தான் திமுக இலவசங்களை அறிவிப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.
















