அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு மருத்துவ ஆய்வு நிபுணர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தை கைவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ ஆய்வு நிபுணர்கள், அரசாணை 262-ஐ ரத்து செய்ய வேண்டும், மருத்துவ ஆய்வு நிபுணர்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மருத்துவ ஆய்வு நிபுணர்கள் பணிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யாமல், முறைகேடாக ஓராண்டு படித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் மருத்துவ ஆய்வு நிபுணர்கள் வலியுறுத்தினர்.
















