கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்புகளில் தகவல் இடம் பெற்றுள்ளது.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தொடர்புடைய கோப்புகள் அமெரிக்க நீதித்துறை உத்தரவின் கீழ் வெளியிடப்பட்டன.
அதில், நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள கடித்தபோது டிரம்ப் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
















