இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாள்ரகளிடம் பேசிய அவர், இந்தியா- அமெரிக்கா வர்த்தக விவகாரத்தில் பிரதமர் மோடியை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் மூலம் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனறும், பல மாதங்களாக அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வர்த்தகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன என்றும், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே உள்ள நட்புறவால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் காகிதத்தை கிழித்து வீசியது கண்டனத்திற்குரியது என்றும், ராகுல்காந்தி இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் சாடினார்.காங்கிரஸ் கட்சியை போல் பிரதமர் மோடி தலை குனிந்து சென்றதில்லை எனறும் கோயல் குறிப்பிட்டார்.
















