புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, “SAGA OF RSS” (சாகா ஆஃப் ஆர்.ஸ்.எஸ்) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளரும், மூத்த தலைவருமான தத்தாத்ரேய ஹோசபாளே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு பயணம், சமூக சேவைகள், தேசத்தை கட்டமைத்ததில் அமைப்பின் பங்கு மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
புதுச்சேரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் அரவிந்தன் மற்றும் நகர தலைவர் தங்கதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
















