காங்கிரஸை அழைக்காத திமுக - விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!
Jun 23, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸை அழைக்காமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில், இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விசிக மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு இண்டி கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மோதல் போக்கு வெடித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக நடத்திய கூட்டத்தை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தங்களை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, இது ஒரு சாதாரணச் சந்திப்பு என்றும் தான் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சியினரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாகவும் கூறியுள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சியினரையும் சந்திப்போம் எனவும் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

Tags: Communist partiesCongressvckPuducherry assembly electionDMK talks with alliance
ShareTweetSendShare
Previous Post

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Next Post

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies