ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள் மற்றும் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை ‘துரோகி’ எனக் கூறிய ராகுல் காந்திக்கு சீக்கியர்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான சீக்கியர்கள் குவிந்தனர். தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியவாறு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர்.
















