சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மாதம் 12ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி 9 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த 4 காவலர்களும், கிரிதரன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட SSI கிரிதரன், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பணிஓய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ரவுடி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் மீதான குற்றத்தை மறைக்க தான் பலிகிடாவாக்கப்பட்டதாக SSI கிரிதரன் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.
குறிப்பாக, சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரும், உதவி ஆணையரும் தப்பிக்க, தாங்கள் காவுகொடுக்கப்பட்டதாக அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















