சீனாவுடன் அமெரிக்கா நல்ல நட்பை பேணி வருவதாக, அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு டொனால்ட் ட்ரம்ப் பேசினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், வர்த்தகம், தைவான் விவகாரம், ரஷ்யா உக்ரைன் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் தான் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்து ஆலோசித்ததாக பதிவிட்டுள்ள ட்ரம்ப், அந்த பயணத்தை தான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
சீனா மற்றும் ஜி ஜின்பிங் உடனான தனது தனிப்பட்ட உறவு நல்ல நிலையில் உள்ளதாகவும், அந்த நல்லுறவு நீடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இருவருமே உணர்ந்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பட்டுள்ளார்.
தனது எஞ்சிய ஆட்சிக்காலத்தில் ஜி ஜின்பிங் மற்றும் சீனா தொடர்புடைய பல நேர்மறையான முடிவுகள் எட்டப்படும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















