ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், அந்நாட்டு மக்கள் தங்களின் துணிச்சலான மற்றும் வினோதமான பொழுதுபோக்கு மூலம் உலகையே வியக்க வைத்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்ற நிலையில், ‘ஐஸ் ப்ளோட்டிங்’ என்ற புதிய குளிர்கால விளையாட்டில் பலர் கலந்து கொண்டனர். அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், ஒரு குழுவினர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்துகொண்டு உறைபனிக்கு நடுவே நீர்நிலையில் மிதந்து “ஐஸ் ஃபுளோட்டிங்”என்ற சாகச நிகழ்வில் ஈடுபட்டனர்.
மாஸ்கோவின் வெப்பநிலை அண்மையில் -20°C -க்கும் கீழே சரிந்தது. இத்தகைய உறைபனி காலநிலையிலும், அந்த சாகசக் குழுவினர் பனிப்பாறைகளுக்கு இடையே இறங்கி, தண்ணீரின் மேல் சாவகாசமாக மிதந்து தங்கள் ஓய்வு நேரத்தைக் கழித்தனர்.
















