மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல்வேறு பணிகளில் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் மதுரையில் வரும் 28ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்ய உள்ளதாகவும், பணிகளை அவ்வப்போது பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ள இந்த பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
















