சேலம் மாவட்டம், ஏற்காட்டில் திடீரென கடும் பனிமூட்டம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏற்காட்டிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், ஏரி
பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது.
இதனால், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். ஏற்காடு மலைப் பகுதியில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியதுபோல பனிமூட்டம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
















