பாகிஸ்தானுக்கு இந்தியா "செக்" -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!
Feb 6, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆண்டின் தொடக்கமே தொடக்கமே இந்தியாவுக்கு வெற்றி செய்தியாகவே உள்ளது. முதலில் ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

அடுத்த சில நாட்களிலேயே, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் விதிகளுக்கு ஏற்பவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.

உலமெங்கும் தனது வர்த்தக உறவுகளை விரைவுபடுத்தி வரும் இந்தியா, தற்போது சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு உறுப்பு நாடுகளைக் கொண்ட அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2004-ல் முதன்முதலில் ஜிசிசியுடன் தொடங்கப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் 2011-ல் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2022-ல் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அறிவித்தன. 2023-ல் ஜிசிசி விதிமுறைகள் ஆவணத்தின் திருத்தப்பட்ட வரைவு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில், இப்போது ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ஜிசிசி-யுடனான வர்த்தக ஒப்பந்தம் உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2021ம் ஆண்டு முதல் ஜிசிசி-இந்திய இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

2021-2022 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஜிசிசி-க்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 155 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இறக்குமதி 110.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 43.9 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அதற்கடுத்த ஆண்டு, இந்த வர்த்தக மதிப்பு சுமார் 185 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதில் இறக்குமதி 133.2 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 51.3 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அதற்கும் அடுத்த ஆண்டில், இந்த வர்த்தக மதிப்பு மீண்டும் உயர்ந்து 162 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு, இது 179 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 56.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், இந்த வர்த்தகம் இன்னும் பன்மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கெனவே ஜிசிசி உறுப்பு நாடுகளுடன் தனித் தனியே இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கடந்த டிசம்பரில் ஓமனுடன் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் இந்தியா தொடங்கி இருப்பது, பாகிஸ்தானை ஜிசிசி உறுப்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் யுக்தி என்றும் கூறப்படுகிறது

Tags: United Arab EmiratesFree Trade Agreement.Bahrain.negotiationssix-nation Gulf Cooperation Councilresumed long-pendingIndiasaudi arabiaOmanQatar
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

Next Post

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

Related News

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies