கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர், சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
















