சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் வி.கே.சசிகலா, தனியாக புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய வி.கே.சசிகலா, தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் அவர், புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
















