அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக் கழகத்தின் இணை வேந்தருமான கோவி செழியன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழாவில் மாணவர்கள் மத்தியில் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். அப்போது அவர் திருக்குறளை பிழையாக கூறினார்.
இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், திமுக தமிழை வளர்த்த லட்சணம் இதுதானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரே இந்த லட்சணத்தில் இருப்பதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர்
















