சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நகைக்காக 2ம் வகுப்பு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகமங்கலத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பள்ளிக்கு வந்து சிறுவனின் மாமா எனக்கூறி அவனை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சிறுவன் அணிந்திருந்த நகைகளை கழற்றிய அந்த நபர், திருச்சி மாவட்டம் கோசுகுறிச்சியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
சிறுவன் தனியாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள், அவனை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்களை நேரில் வரவழைத்து சிறுவனை ஒப்படைத்தனர்.
இதனிடையே மாணவரை கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
















