கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி மாணவியர் விடுதி செயல்பட்டு வரும் நிலையில், அதன் அருகே தனியார் மதுபான கூடம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அமைய உள்ள இந்த மதுபான கூடத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் தங்கியிருக்கும் கட்டடத்திற்கு அருகில் மதுபானக் கூடத்திற்கு அரசு அனுமதி அளித்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
















