கதிர் வரும் பருவத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்துள்ள நெற்பயிர்களை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கதிர் வரும் பருவத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக தெரிவித்தார்.
நெற்பயிர்கள் காய்ந்துவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், விவசாயிகளின் கஷ்டத்தை அரசு உணர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் எனறும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
















