திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருந்து வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கடலூரில் ஐஜேகே மாநாட்டில் அவர் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
“திமுக ஆட்சியில் வேங்கை வயல், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருந்து வருவதாகவும், ஜனநாயகம் தழைத்து ஓங்க, குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் என்றும் நயினார் தெரிவித்தார்.
















